ஆணாதிக்கமும்,பெண்ணடிமைத்தனமும்

மே 21, 2009 by lrvenkatesh

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் பற்றி ஊடகங்களில் அறியப்படும் போது நினைத்து கொள்வேன் இப்படியெல்லாம் நடக்குது போல அப்படின்னு.ஆனால் உண்மையில் அவ்வாறு பேசுகிறவர்கள் ரொம்பவும் மிகை படுத்தி சொல்லுகிறார்களோ என்று இப்போது தோன்றுகிது.

ஒரு பெண்ணை எந்த ஆண் அடிமை படுத்த முடியும்ஒருபெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்கள் யார்யார்?தகப்பன், சகோதரன்,கணவன்,மகன் இந்த நான்கு ஆண்களில்எந்த நிலையில் இருக்கும் ஆண் ஒரு பெண்ணை அடிமைபடுத்துகிறான்.

தகப்பன்

எந்த ஒரு பெண்ணும் என் அப்பா ஒரு ஆண்! அதனால் தன்ஆணாதிக்க புத்தியை என் மீது காட்டி அடக்குகிறார் அல்லது,கொடுமை படுத்து கிறார் என சொல்லுவார்கள் என நினைக்கமுடியவில்லை.எனவே அப்பாவை விட்டுடுவோம்.

சகோதரன்

பெரும்பாலும் பெண்கள் தன் அண்ணன் தம்பிகள் மீது அதிகபாசம் கொண்டவர்கள் தான். இருந்தாலும், சில,பலஇடங்களில் சச்சரவுகள் ஏற்படுகிறது.ஒரு சகோதரன் தன்சகோதரியை கண்டிக்கும் போது இருவருக்கும் சிறு சல சலப்புஏற்படுகிறதுஉதரணமாக சகோதரியின் உடை விஷயங்கள்,வெளியே செல்லும் விசயங்களில் சகோதரன் கண்டிக்கும்வாய்ப்பு இருக்கிறதுஇங்கே சகோதரிகள் ஒன்றை புரிந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்பெண்கள்பேசும் ஒரு வசனம் உண்டு அதாவது ஒரு பெண்ணின் மனதைஇன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று.எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்துகொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொருஆணுக்குதான் தெரியும்.சில வகை உடைகள் அணிந்து செல்லும் போதோ,அல்லதுதனியே வெளியில் செல்லும் போதோஅந்த சகோதரியின்மீது மற்றவர்கள் பார்வை எப்படி விழும் என்பது அந்தசகோதரனுக்கு நன்றாக புரியும்அதை அவனால் அவன்சகோதரியிடம் வெளிப்படியாக சொல்லி விளக்கமுடியாது.அதை சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அந்தநேரத்தில் அந்த சகோதரன் கோபத்தை வெளிப்படுத்தினால்அது அன்பாலும்,அக்கறையாலும் ஏற்படுகிறது என்பதையும்புரிந்து கொள்ள வேண்டும்அதோடு வீட்டுக்கு தெரியாமல்காதலிக்கும் பெண்களுக்கு சகோதரர்கள் முதல் எதிரியாகதோன்றுகிறார்கள்.ஒரு சகோதரன் தன் சகோதரிக்கு கணவனாக வருகிறவன்,தன்னை விட அறிவிலும் அந்தஸ்திலும்திறமையிலும்,வசதியிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றுதான்விரும்புகிறான்அதே சமயம் ஒரு சகோதரி தன் சகோதரனுக்குபெண் பார்க்கும் போது வருகின்ற பெண் தன்னிடம் இணக்கமாகஇருக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பதாகசிலர் சொல்லுகிறார்கள் . (சிலர் சொல்லுகிறார்கள் -எஸ்கேப்பு).

கணவன

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் இந்த பிரச்சினையின்வேர் இங்கே தான் இருக்குமோ என்று நினைக்கதோன்றுகிறது.ஆனால் நன்கு புரிந்து கொண்டுவிட்டுகொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுபவர்களிடம்எந்த பிரச்சனையும் தோன்றுவதில்லைமேலும் திருமணமானபுதிதில் இருக்கும் அந்த ஆணாதிக்க பிரச்னை நாளாக நாளாகவீரியம் குறையும் என்பது என் நம்பிக்கை

மகன்

எந்த பெண்ணும் தன் மகனை இவன் ஆணாதிக்க கர்வம் பிடிச்சவன் என்று எப்போதும் சொல்ல போவது இல்லை அதனால் இதை பற்றி ஒன்றும் சொல்ல தேவை இல்லை

பொதுவானவ

தகப்பன்,சகோதரன்,கணவன்,மகன் இவர்களை தவிர வேறுயாரேனும் ஒரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்திவிடமுடியுமாஅப்படி நடந்தால் அதை பார்த்து கொண்டு இவர்கள்சும்மா இருந்து விடுவார்களா? பணிக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு ஆணாதிக்கபிரச்னை இருப்பதாக சொல்ல படுகிறதுஇதை வீட்டில்சொல்ல முடியாமல் இருக்கலாம் இந்த பிரச்சனையைபெண்கள் தைரியத்துடனும்,லாவகத்துடனும் எதிர் கொள்ளவேண்டும்ஒருவன் தான் பதவியில் இருக்கிறோம் என்றஎண்ணத்தில் மற்றவர்களிடம் அதிகாரம் செலுத்தினால் அவன்நிஜத்தில் ஒரு கோழை யாகத்தான் இருப்பான்! மேலும்எங்கள் நாட்டு பெண்கள்கலாச்சாரத்திலும்,கண்ணியத்திலும்,பண்பாட்டிலும்சிறந்தவர்கள் என்ற எண்ணம் இங்கே எல்லோருக்குமேஉண்டு.அதன் பொருட்டு சில நவ நாகரிக நங்கைகளின் உடை ,மற்றும் நடவடிக்கைகளை விமர்சிக்கும்போது அதஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என திரித்து கூறப்படுவதாகதோன்றுகிறது.

நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாகபார்க்கவில்லை!

நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒருபெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மனைவியை மனைவியாகத்தான் பார்க்கிறேன்!ஒருபெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மகள்களை மகள்களாக தான் பார்க்கிறேன்!பெண்களாக பார்க்கவில்லை!

About Me – வசிப்பது

மே 5, 2009 by lrvenkatesh

வசிப்பது

Coimbatore (Manchester of South India) – A wonderful place to live….

சிறுவாணி தண்ணீர்

கொஞ்சமாய் வெயில்

மரியாதை தரும் மக்கள்

இப்படி நிறைய

நல்ல விஷயங்கள் . . .

எதிரிகள்

பொது இடத்தில்
சிகரெட் பிடிப்பவர்கள் . . .

எச்சில் துப்புவர்கள் . . .

பேசுகிறேன் பேர்வழி
என்று சொல்லி
ரம்பம் போடுபவர்கள் . . .

தான் பேசுவது
ஊருக்கே கேட்பது
போல்
பேசுபவர்கள் . . .

Helmet போடாமல் வண்டி ஓட்டுபவர்கள் . . .

தண்ணி அடிச்சிட்டு

பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . .

மனைவியை அடிப்பவர்கள் . . .

தோழி/நண்பன் என்ற பேரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ———————–

அவ்ளோ தான் ;)

SIGNS – மொழியில்லாத் தருணங்கள் -குறும்படம்

மே 5, 2009 by lrvenkatesh

மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு)
சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி.

இன்று பார்த்த குறும்படம் SIGNS.

12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன்.
காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகிறாள். மனம் குன்றிப்போகிறான்.அவள் நினைவில் வீடு வருகிறவனுக்கு தனிமை சுடுகிறது.
மறுநாள் அலுவலகம் செல்லும்போது ரயிலில் இருவர் முத்தமிடுவதை காண்கிறான்.பரிமாற அன்பில்லாத உலகை எண்ணியபடி அலுவலகம் சென்று தன் இருக்கையில் அமர்கிறான்.

அவனது சன்னல் வழியே அருகிலிருக்கும் அலுவலகம் தெரிகிறது. அங்கே நேற்று அவன் பார்த்த அதே பெண் இருக்கிறாள். வேலையில் மும்முரமாக இருப்பவளை ரசித்துக்கொண்டே இருக்கிறான்.இவன் ரசிப்பதை அவள் கண்டுகொள்கிறாள். ஒரு அட்டையில் “புகைப்படம் எடுத்துக்கொள்” என்று எழுதி காண்பிக்கிறாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உடனே அவள் “சும்மா விளையாடினேன்” என்கிறாள். இவன் முகம் மலர்கிறது. தன் பெயரை எழுதி காண்பிக்கிறாள். இவனும் தன்னுடைய பெயரை எழுதி காண்பிக்கிறான். மெல்ல மெல்ல வளர்கிறது நட்பு. இருவரும் எழுத்தால் பேசிக்கொள்கிறார்கள். இந்த அற்புதமான,விசித்திரமான நேசத்தால் சுழல்கிறது அவனது உலகம். ஒருநாள் “சந்திக்க விரும்புகிறாயா” என்று எழுதி சன்னல் வழியே காண்பிக்கிறான். அவள் இருக்கை காலியாக இருக்கிறது. எங்கு சென்றாள் என்கிற கவலையால் துடிதுடிக்கிறான்.மறுநாள் சோர்வுடன் அலுவலகம் வந்தமர்கிறான். அவனது முகத்தில் திடீரென்று வெயிலடிக்கிறது.என்னவென்று சன்னல்வழியே எட்டிப்பார்க்கிறான். அங்கே அவள் நிற்கிறாள்.
“தான் பதவி உயர்வு பெற்ற செய்தியை எழுதிக்காண்பிக்கிறாள். இதை நாம் கொண்டாட வேண்டுமென்கிறான் இவன். அவளும் சரி என்க,தயக்கத்தோடு “சந்திக்க விரும்புகிறாயா” என்கிறான்.சந்தோஷத்தோடு அவளும் சரி என்கிறாள். இருவரும் சந்திக்கும் ஆவலில் ஓடோடி வருகிறார்கள்.

எதிரெதிரே இருவரும் நிற்கிறார்கள்.அவன் பேச முற்படும்போது,பேசாதே என்று சைகை செய்கிறாள் அவள்.
கண்களில் குழப்பத்தோடு அவன் பரிதவித்து நிற்கும்போது தான் கொண்டு வந்திருக்கும் அட்டையை காண்பிக்கிறாள்,அதில் ஒரு இதயத்தின் படம் வரையப்பட்டு “Hi” 
என்று எழுதப்பட்டிருக்கிறது. இருவரும் புன்னகைக்கிறார்கள். மனதை வருடும் இசையோடு முடிகிறது படம்.

இந்த குறும்படத்தின் மிக முக்கிய ஜீவனாக திகழ்வது இசை.அவளைக்காணாமல் அவன் தவிக்கின்ற நேரத்தில் சோகமாகும் இசை,அவளுக்காக அவன் ஓடுகின்ற போது வேகமெடுக்கிறது.குறிப்பாக 8ம் நிமிடத்திற்கு பிறகு இசையோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.அடுத்து, கதாநாயகனின் முகபாவங்கள்.ஒவ்வொரு காட்சியிலும் மனதை அள்ளிப்போகிற‌து.க‌ண்க‌ளாலே இருவ‌ரும் பேசிக்கொள்வ‌து க‌விதை.
மொழியில்லா தருணங்களை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

மூன்று ம‌ணிநேர‌ம் செல‌விட்டு நான்கு குத்துபாட‌ல்க‌ள்,நாற்ப‌து ச‌ண்டைக‌ள்,நாலாயிர‌ம் “ப‌ஞ்ச்” ட‌ய‌லாக்குக‌ள் பார்ப்ப‌த‌ற்கு ப‌தில் இதைப்போல் நான்கு ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌லாம் :)

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY

Chicken a la Carte – குறும்படம்

மே 5, 2009 by lrvenkatesh

Chicken a la Carte -குறும்படம்

ஆறு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற வலி மிக அதிகம்.

உணவுவிடுதிக்கு இருபெண்கள் வருகிறார்கள்.கோழிக்கறியும் சாதமும் ஆர்டர் செய்கிறார்கள். கொஞ்சமாய் கொறித்துவிட்டு மீதம் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

அங்கே வருகின்ற ஒருவர் அந்த மீதமான கறியை ஒரு வாளியில் எடுத்து செல்கிறார்.
தன் வீட்டிற்கு செல்கின்ற அவரை, அங்குள்ள குழந்தைகள் சந்தோஷமாய் ஓடிவந்து மொய்த்துக்கொள்கிறார்கள். 

[இந்தக்காட்சியிலிருந்து எழும்புகின்ற இசையும் அதன் வரிகளும் கல்நெஞ்சையும் உருக வைத்துவிடும்.]

அந்த கோழிக்கறிக்காக வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். இவர் ஒவ்வொருவருக்கும் தட்டில் உணவை எடுத்து வைக்கிறார்.மலர்ந்த முகத்தோடு குழந்தைகள் அதனை தொட எத்தனிக்கும்போது தடுத்துவிட்டு,கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிட சொல்கிறார்.

பசியால் தினம் தினம் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் மடிகிறார்கள். இது ஒரு நிஜ கதை என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் இது.பார்த்துமுடித்து சில மணி நேரங்கள் எதுவும் செய்ய இயலாமல் மனம் கனத்து போனது.
பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte